search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதிகள் ஒதுக்கீடு"

    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

    இதில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதி, பா.ம.க.வுக்கு-7, தே.மு.தி.க-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக்கட்சி-1, என்.ஆர்.காங்கிரசுக்கு-1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்று உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனாலும் தொகுதிகள் விவரத்தை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் நேர்காணல் நிகழ்ச்சி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



    இதில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    1. மத்திய சென்னை, 2, ஸ்ரீபெரும்புதூர், 3.ஆரணி, 4. அரக்கோணம், 5.சிதம்பரம், 6.தர்மபுரி, 7.திண்டுக்கல்.

    தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :-

    1. வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருதுநகர்.

    புதிய தமிழகம்- தென்காசி. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்-10, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களை வரவழைத்து பேசிய பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகவில்லை.

    இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அன்று காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான மூவர் குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் சுமார் 15 தொகுதிகளின் பட்டியலை அளித்தனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. போட்டியிடும் இடங்கள் முடிவானது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகை, தென்காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், ம.தி.மு.க.வுக்கு ஈரோடு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், ஆரணி, திருச்சி, திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.



    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. ஆலோசனை கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.

    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies

    ×